"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்

LATEST NEWS

500/recent/ticker-posts

"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்

"ஒரு தாய் மட்டுமே தனது மகனின் காதை பிடித்து இழுத்து அவனுக்கு உத்தரவிட முடியும்"  என பஞ்சாப் விவசாயி ஒருவர் பிரதமர் மோடியின் தாய்க்கு, மோடியிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார்.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய தனது மகனுக்கு அவர் உத்தரவிட வேண்டும் என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

image

பிரதமர் மோடியின் தாய்க்கு எழுதிய கடிதத்தில், ஹர்பிரீத் சிங், “நான் இந்த கடிதத்தை மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன். மூன்று கறுப்புச் சட்டங்களால் இந்த குளிர்ந்த குளிர்காலத்தில் தேசத்துக்கும், உலகத்துக்கும் உணவளிக்கும் அன்னதாதாக்கள் டெல்லியின் சாலைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் 90-95 வயதுடைய முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். குளிர்ந்த காலநிலை மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. அவர்கள் தியாகியாக இருக்கிறார்கள், இது நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரம் விவசாயிகளுடன் பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்பிரீத் சிங், சில நாட்களுக்கு முன்பு சிம்லாவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தியில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், மேலும் “அதானி, அம்பானி மற்றும் பிற கார்ப்பரேட் குடும்பங்களின் உத்தரவின் பேரில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் இந்த போராட்டம் அமைதியாக நடைபெறுகிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து ஏமாற்றமடைந்து தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். நாட்டின் விவசாயிகள் இந்த சட்டங்களில் எந்த திருத்தங்களையும் விரும்பவில்லை, ஆனால் அவற்றை ரத்து செய்ய விரும்புகிறார்கள் ”என்று  தெரிவித்துள்ளார்.

image

விவசாயிகள் சங்கங்களும், மத்திய அரசும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன, ஆனால் தற்போது வரை எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. இறுதியாக அக்கடிதத்தில் “நான் இந்த கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் மகன் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர். நீங்கள் கூறினால் நிறைவேற்றிய பண்ணை சட்டங்களை  அவர் திரும்பப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன், ஒரு நபர் தனது தாயைத் தவிர வேறு யாரின் வார்த்தையையும் மறுக்க முடியும், ஏனெனில் நம் நாட்டில் தாய் ஒரு கடவுளாக கருதப்படுகிறார். உங்கள் மகன் பிரதமர் மோடி உங்கள் கோரிக்கையை ஒருபோதும் மறுக்க மாட்டார். உங்கள் மகன் உங்கள் பேச்சைக் கேட்டு இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வார் என்று நான் நம்புகிறேன். முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். ஒரு தாய் மட்டுமே தன் மகனின் காதை பிடித்து இழுத்து உத்தரவு போடலாம். இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டால், அது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும், இதில் யாருக்கும் தோல்வியில்லை ”என்றும் கூறியிருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3odBvOT
via IFTTT

Post a Comment

0 Comments