மண்டல வாரியான பொறுப்பாளர்கள் பங்கேற்கும் அதிமுக ஆலோசனைக் கூட்டம்: நோக்கம் என்ன?

LATEST NEWS

500/recent/ticker-posts

மண்டல வாரியான பொறுப்பாளர்கள் பங்கேற்கும் அதிமுக ஆலோசனைக் கூட்டம்: நோக்கம் என்ன?

அதிமுகவின் மண்டல வாரியான பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல வாரியான பூத் கமிட்டிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

image

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், சட்டமன்ற பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், சென்னையில் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, மூன்றாவது முறையாக நடக்க இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பூத் கமிட்டியை வலுப்படுத்துதல், அதில் அதிகப்படியாக பெண்களை இணைத்தல், அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments