
கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கைப்பேசியை திருடியவர்களை தலைமைக் காவலர் துரத்திச் சென்று பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திருடனை பிடிக்கும் முயற்சியின்போது இடறி விழுந்ததால் காயமடைந்த தலைமைக் காவலர் மணிகண்டன், விடாமல் துரத்தி திருடனை பிடித்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments