விவேக் பட காமெடி போல பெண் காவல் அதிகாரியிடம் ரகளை செய்த 3 பேர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

விவேக் பட காமெடி போல பெண் காவல் அதிகாரியிடம் ரகளை செய்த 3 பேர் கைது

நடிகர் விவேக் பட காமெடி போல ஆண் போல இருந்த பெண் உதவி ஆய்வாளர் தோளில் கை போட்டு ஆபாசமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு  மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர்  ஆண் உருவம் போல முடி வெட்டிக்கொண்டும், ஆடையும் அணிந்து வருகிறார். இந்நிலையில் பெண் உதவி ஆய்வாளர் நேற்று ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிசர்ட் உடையில் தனது தோழியுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்ட பின்பு நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மோர் குடித்து வந்தார்.

Dy.SPs and Police Inspectors transferred - Star of Mysore

அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 வாலிபர்கள், பின்புறமாக திரும்பி மோர் குடித்து வந்த பெண் உதவி ஆய்வாளர் தோளின் மீது கை போட்டு, இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என கூறியுள்ளனர். உடனே திரும்பி தான் பெண் எனவும், காவல் உதவி ஆய்வாளராக இருந்து வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பெண் என நம்ப முடியவில்லை எனவும், உதவி ஆய்வாளர் என எப்படி நம்புவது என பெண் உதவி ஆய்வாளரை கிண்டலடித்து உள்ளனர். மேலும் பெண் உதவி ஆய்வாளரின் உடலமைப்பை ஆபாசமாக வர்ணித்தும், கேலி கிண்டலும் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட மூன்று போதை ஆசாமிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

image

விசாரணையில் தேனாம்பேட்டை சேர்ந்த செல்வகுமார், கல்லூரி மாணவர் நரேஷ், மந்தைவெளி சேர்ந்த விக்னேஷ் ஆகிய மூவரும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் போதையில் ரகளையில்  ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். "காதல் கிசு கிசு" என்ற தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரிடம் சிக்குவார். அப்போது ஆண் போல இருக்கும் பெண் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பது போல சிக்கி கொண்டு கதறுவார். இதுபோன்ற சம்பவம் தான் இது என காவல்துறையினர் சிலர் கூறுகின்றனர்.

கைதான 3 பேர் மீதும் பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 5  பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments