உ.பி.யில் பட்டப்பகலில் இளைஞரை குத்திக்கொன்ற கும்பல் - சிசிடிவி காட்சி வைரல்

LATEST NEWS

500/recent/ticker-posts

உ.பி.யில் பட்டப்பகலில் இளைஞரை குத்திக்கொன்ற கும்பல் - சிசிடிவி காட்சி வைரல்

உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

உத்தரப் aபிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரின் இடுப்புப் பகுதியில் குத்தினார்.

image

இதையடுத்து கீழே விழுந்த அவரை மேலும் இரண்டு நபர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்ற போதிலும் அவரை காப்பாற்ற ஒருவர் கூட முன்வரவில்லை. இதனால் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வீடியோ சோர்ஸ்: என்டிடிவி

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக அந்த இளைஞரின் உறவினர்களே அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments