பள்ளிக்குள்ளேயே ஆசிரியையுடன் தலைமையாசிரியர் உறவு... ஆதாரத்துடன் புகார் தந்த கிராம மக்கள்

LATEST NEWS

500/recent/ticker-posts

பள்ளிக்குள்ளேயே ஆசிரியையுடன் தலைமையாசிரியர் உறவு... ஆதாரத்துடன் புகார் தந்த கிராம மக்கள்

உத்தரபிரதேசத்தின் சட்டிஸ்கர் பகுதியிலுள்ள பள்ளியொன்றின் தலைமையாசிரியர், பள்ளி ஸ்டோர் ரூமில் வைத்து ஆசிரியையிடம் பாலியல் உறவுகொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வீடியோயெடுத்துள்ள அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அதை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அப்பள்ளிமுதல்வர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த தலைமையாசிரியர் - ஆசிரியை பள்ளி வளாகத்துக்குள் பாலியல் உறவுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பலராலும் பகிரப்பட்டு கண்டனங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. வீடியோ குறித்து புகார் செய்த கிராம மக்கள் தெரிவிக்கையில், `பள்ளியின் அந்த இடத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து, அதை அறியவே நாங்கள் வீடியோ எடுத்தோம்’ என சொன்னதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வீடியோவுக்குப் பின்னர், அதைவைத்து பள்ளி முதல்வரிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பான ஆடியோ க்ளிப் சில தினங்களுக்கு முன் பரவியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆடியோவில் தயவுசெய்து வீடியோவை வெளியிடவேண்டாமென அந்த பள்ளிமுதல்வர் கேட்பதாக தெரிகிறது.

11 employees suspended - Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K

புகாரை பொறுத்தவரை, அந்த வீடியோ ஆதாரத்தை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கின்றனர். அதன்பிறகு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் தரப்பில், தாங்கள் ஏற்கெனவே அந்த முதல்வரை எச்சரித்ததாகவும், “அந்த தலைமையாசிரியரிடம் `இதுபோன்ற தவறான செய்கைகளில் ஈடுபடாதீர்கள். இல்லையெனில் பள்ளியை விட்டு நீங்களாகவே சென்று விடுங்கள்’ பலமுறை சொன்னோம். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கொரோனாவின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் பள்ளிமுதல்வரும் அந்த ஆசிரியையும் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்” என புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்தி: 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை - உ.பி.யில் பயங்கரம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/pBGY7ox
via IFTTT

Post a Comment

0 Comments