மதுரை: சொத்துத் தகராறு; தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்

LATEST NEWS

500/recent/ticker-posts

மதுரை: சொத்துத் தகராறு; தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்

மேலூர் அருகே சொத்து பிரச்னை காரணமாக, போஸ்ட்மேன் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ராஜீவ்காந்தி. இவர் கீழவளவில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது தம்பி கார்த்திக் என்பவருக்கும், சொத்து குறித்தும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

image

இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்தபோது இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த அரிவாளால் ராஜீவ்காந்தியின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ராஜீவ்காந்தி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் சரக துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் கீழவளவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த ராஜீவ்காந்தி உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக, கார்த்திக்கை கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ராஜீவ்காந்தியால் வளர்க்கப்பட்ட நாய், அவரின் உடல் அருகே காத்துக் கிடந்ததோடு அவரது உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னால் நாய் சென்றது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments