ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50ஆவது போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரரான டேவிட் வார்னர், 92 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியில் நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம்-ஐ தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை. பூரன் 62 ரன்களும், மார்க்ரம் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது. இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது.
இதையும் படிக்கலாம்: 'விராட் கோலிக்கு ஒரு பிரேக் தேவை' - எம்.எஸ்.கே பிரசாத் வலியுறுத்தல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hYIRXJK
via IFTTT
0 Comments