பெரம்பலூர்: வாகன சோதனையில் சிக்கிய 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

பெரம்பலூர்: வாகன சோதனையில் சிக்கிய 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

பெரம்பலூர் அருகே நகை மற்றும் கார் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் கடந்த 8ஆம் தேதி பாண்டியன் என்பவரது வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்ததோடு காரையும் எடுத்துகொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

image

இந்த நிலையில் சிறுவாச்சூர் அருகே நடந்த வாகன சோதணையில் 5 பேர் சிக்கினர். அவர்கள் தான் அம்மாபளையத்தில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சம்பவத்தில ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் வேளாங்குளம் சூர்யா (23), ரஞ்சித் (25), மதுரை மாவட்டம் உரங்கன்பட்டி அழகர்பாண்டியன் (32), பெரம்பலூர் சமத்துவபுரம் சுப்ரமணியன் (48)மற்றும் சென்னை பெருங்குடி பிரசாந்த் (26) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

image

பின்னர் அவர்களிடமிருந்து நகை மற்றும் கார் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொள்ளையர்களை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தள்ளிவிட்டு பிரசாந்த் என்பவர் தப்பிபயோடி விட்டதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு பேரை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments