மொரப்பூர் பொதுக்கூட்டத்தில் எதார்த்தமாக இருந்தோம் மேடையில் ஏறி விட்டீர்கள், இப்போது அரூரில் தயாரிப்போடு வந்திருக்கிறோம் வா மோதி பார்ப்போம் என்று திமுகவினருக்கு அறைகூவல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்... சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையை அதிவிரைவு சாலை என பெயர் மாற்றம் செய்து, திட்டத்தை தற்போது திமுக அரசு நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.
இங்குள்ள மலைகளில் உள்ள கனிமங்களை கொள்ளையடிக்கப் போகிறார்கள். இந்தத் திட்டத்தை அரூர் பகுதி வாழ் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும். எப்போதும் உங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் துணை நிற்பார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்... மொரப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாங்கள் எதார்த்தமாக இருந்தோம், அதனால் திமுக நிர்வாகிகளே நீங்கள் மேடையில் ஏறிவிட்டீர்கள். ஆனால் தற்போது முன் தயாரிப்போடு வந்திருக்கிறோம். வா மோதிப் பார்ப்போம் வந்தால் சம்பவம் தான். வரிப்புலி நாங்கள், வந்தால் திரும்பி போகமுடியாது என்று திமுகவினருக்கு கரிகாலன் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/8wiWuQU
via IFTTT
0 Comments