சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற அண்ணன்: திருவண்ணாமலையில் சோகம்

LATEST NEWS

500/recent/ticker-posts

சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற அண்ணன்: திருவண்ணாமலையில் சோகம்

சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கிராமத்தில் பதற்றத்துடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு. இவருக்கு ஜெகதீசன், கோதண்டராமன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்வதற்காக சொத்தில் தனது பங்கை பிரித்துத் தருமாறு கோதண்டராமன், தனது அண்ணன் ஜெகதீசனிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு கோதண்டராமன் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

image

இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கோதண்டராமனை நேருக்கு நேராக மார்பில் சுட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கோதண்டராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

image

சொத்துத் தகராறில் உடன்பிறந்த தம்பியை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments