மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை சேலையூர் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கோவிலஞ்சேரியைச் சேர்ந்தவரகள், சுப்ரமணி - தேன்மொழி தம்பதியர். குடும்பப் பிரச்னை காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கோவிலஞ்சேரியில் உள்ள தன் வீட்டில் தேன்மொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, தேன்மொழியின் தாயார் சாந்தி, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் இறப்பிற்கு சுப்ரமணி தான் காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரை பெற்ற போலீசார் சுப்ரமணியிடம் விசாரித்தனர். இதையடுத்து அவர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், குடி பழக்கத்திற்கு அடிமையான சுப்ரமணி, மது குடித்துவிட்டு, தேன்மொழியிடம் அடிக்கடி, தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளன்றும் தேன்மொழியிடம் தகராறு செய்துள்ளார்.
அதனால், மனமுடைந்த தேன்மொழி வீட்டிலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சுப்ரமணி அவரை தடுக்காமல் இருந்துள்ளார். இதனால், தேன்மொழி தூக்கு கயிற்றில் சிக்கி இறந்துள்ளார். அதை, போலீஸ் விசாரணையின்போது, அப்போதே சுப்ரமணி மறைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணைக்குப் பிறகு அவர்கள் அளித்த தகவலின்படி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, சேலையூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments