ஆம்பூர்: சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து - ஒருவர் உயிரிழப்பு

LATEST NEWS

500/recent/ticker-posts

ஆம்பூர்: சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திகுத்து - ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த இரு பெண்களை ஒரு நபர் கத்தியால் குத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மற்றொரு பெண் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியை சேர்ந்த  சில பெண்கள் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் படுத்துறங்கிய பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கௌசர் (27) என்ற பெண் மற்றும் தனம் (29) என்ற பெண்ணை ரத்த வெள்ளத்தில் மீட்ட உடனிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

அங்கு சிகிச்சை பலனின்றி கௌசர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார், படுகாயமடைந்த தனம் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு  கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பதும், மூன்று மாதங்களுக்கு முன்பு தனம் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்து வந்த நிலையில் தேவேந்திரனை விட்டு தனம் பிரிந்து ஆம்பூர்  வந்துள்ளதாக கூறப்படுகிறது,
 
இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் தனத்தை தேடி நேற்று நள்ளிரவு  ஆம்பூர் பகுதியிற்கு வந்து சாலையின் ஓரம் காலணி கடையின் வெளியே உறங்கிகொண்டிருந்த தனத்தை கத்தியால் குத்திய போது அதை தடுக்க வந்த கௌசர் என்ற பெண்ணிற்கு தவறுதலாக தொண்டை பகுதியில் கத்தி குத்து விழுந்தது என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

image

மேலும் கௌசரின் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேவேந்திரன் என்பவரை  கைது செய்து அவரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கௌசருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments