நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

LATEST NEWS

500/recent/ticker-posts

நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சொகுசு கார் மீதான நடிகர் விஜய் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டு இருந்தது. பொதுவாக கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக 2 சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும், ஆனால், 40 சதவீதம் கணக்கிட்டு இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.

image

தீர்ப்பின்படி `இறக்குமதி செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ காருக்கான நுழைவு வரி மீதான அபராதத்தை, 2005-ம் ஆண்டிலிருந்து வசூலிக்கக்கூடாது. 2019-ம் ஆண்டின் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தாத காலத்திற்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்’ என்று வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விஜயின் கார் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0LPWwBJ
via IFTTT

Post a Comment

0 Comments