சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் -ஆயுள் மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

LATEST NEWS

500/recent/ticker-posts

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் -ஆயுள் மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

image

சென்னை கோவிலம்பாக்கம் அருகில் சுண்ணாம்பு கொளத்தூரை சார்ந்த முருகன் என்பவரின் மகன் பிரசாந்த் (32) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியை சார்ந்த அவரின் நண்பரின் 8 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவரை தாக்கி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர்,புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

image

இந்த வழக்கில் இன்று நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளில் ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 41 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

image

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 7 இலட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments