மெட்ரோ ரயில் நிலையத்தில் 70 வயது முதியவர் எடுத்த விபரீத முடிவு!

LATEST NEWS

500/recent/ticker-posts

மெட்ரோ ரயில் நிலையத்தில் 70 வயது முதியவர் எடுத்த விபரீத முடிவு!

70 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் உள்ள குரு துரோனாச்சாரியா மெட்ரோ நிலையத்தில் ரயில் புறப்படும் போது குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த அவரின் பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

image

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவருடைய ஐடி கார்டை வைத்து அவருடைய பெயர் ராம் நாராயண் என்பதும், அவர் பிறந்த ஊர் கான்பூர் என்பதையும் தெரிவித்தனர். மேலும் அவர் குருகிராமில் வாடகைக்கு குடியிருந்து வந்ததாகவும், அவருக்கு ஒரு மகன் இருப்பதும் அவர் வெளி நாட்டில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

image

மேலும் போலீசார் கூறுகையில், ராம் நாராயண் தினமும் மாலை 5 மணிக்கு வாக்கிங் வருவார் என்றும் அப்பொழுது தான் அவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments