பெரியகுளம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

பெரியகுளம்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் கைது

பெரியகுளத்தில் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த 61 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் நாகராஜ் (61). இவர், தனது உறவினரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

image

இதையடுத்து விசாரணைக்கு பின்பு முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments