`டிராவல் பார்ட்னர்’ என பெண்ணின் படத்தை வெளியிட்ட சாஹல்! இறுதியில் காத்திருந்த செம ட்விஸ்ட்

LATEST NEWS

500/recent/ticker-posts

`டிராவல் பார்ட்னர்’ என பெண்ணின் படத்தை வெளியிட்ட சாஹல்! இறுதியில் காத்திருந்த செம ட்விஸ்ட்

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இந்தூருக்கு பயணம் செய்துள்ள நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது டிராவல் பார்டனர் என இணையதளத்தில் பதிந்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

குறும்புத்தனமான நிகழ்வுகளுக்கு பெயர் போனவரான, யுஸ்வேந்திர சாஹல் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் ஒரு நிமிடம் குழம்பி போன நிலையில், பல ரசிகர்கள் புகைப்படத்தில் இருக்கும் டிராவல் பார்ட்னர் யார் என்பதை கண்டுபிடித்து கலாட்டாவாக்கி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் தொடர் போட்டிகளில் பங்குபெற்று விளையாடிய யுஸ்வேந்திர சாஹல், தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பெஸ்ட் காம்பாவோக இந்திய கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இருந்துவந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து விளையாடும் வாய்ப்பு சமீப காலமாக இல்லாமலேயே இருந்துவருகிறது. ஒருவர் அணியில் பங்குபெற்று விளையாடினால், மற்றொருவர் பெஞ்சில் அமரவேண்டிய இடத்தில் தான் இருந்துவருகின்றனர். அந்தளவு அணிக்கான இடத்தில் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி இருந்துவருகிறது.

image

என்னதான் இருவருக்கும் இடையில் அணியில் யார் என்பதற்கான போட்டி பலமாக இருந்துவந்தாலும், இருவருக்குமான நட்பென்பது அனைவராலும் ரசிக்கும்படியாக தான் இருந்து வருகிறது. போட்டிகளின் இடையேயும், சமூக வலைதளங்களிலும் இவர்கள் அடிக்கும் கலாட்டாவிற்காகவே இவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறும்புத்தனங்கள் நிறைந்த இவர்களை, ரசிகர்களால் செல்லமாக “குல்ச்சா” என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

image

இந்நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இந்தூருக்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் 24ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் பஸ் பயணத்தின் போது தன்னுடன் பயணம் செய்த நபரை “டிராவல் பார்ட்னர்” என கேப்சன் வைத்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.

image

இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், டிராவல் பார்டனராக அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பெண்ணாக இருந்தது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பேருந்துக்குள் எப்படி பெண் என ஒரு நிமிடம் குழம்பி போன நிலையில், பல ரசிகர்கள் அது யார் என்பதை கண்டுபிடித்து, சாஹலின் கலாட்டாவை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

image

அந்த பதிவில், ஆணை பெண்ணாக மாற்றும் ஆப் மூலம் உடன் பயணித்த குல்தீப் யாதவை பெண் போல் மாற்றி பதிவிட்டுள்ளார், யுஸ்வேந்திர சாஹல். சாஹலின் இந்த கலாட்டா சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டாலும், சில ரசிகர்கள் எதிர்ப்பையும் பதிவுசெய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Q1IhESw
via IFTTT

Post a Comment

0 Comments