போராட்டம் தொடர்பாக, ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் துனைத்தலைவர் உதயக்குமார் அவர்கள் நம்மிடம் பேசியப்பொழுது,
உங்களுக்கு மாற்று பணியாக ஆரம்ப சுகாதாரத்தில் பணி வழங்குவதாக அரசு அறிவித்த பொழுது நீங்கள் போராட்டத்தில் ஈடுபட காரணம் என்ன?
”அரசு தரப்பில் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இட ஒதுக்கீடு சரிவர பின்பற்றாமல் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக சொல்கிறார்கள். இதை MRP Board நிறுபிக்கவேண்டும். ஏனென்றால் எங்களின் பணி ஆனையில் இட ஒதிக்கீடு முறையாகப்பின் பற்றப்பட்டு பணியில் சேர்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. ஆரம்ப சுகாதாரத்தில் பணி வழங்கினால் ஒவ்வொரு பதினொன்று மாதத்திற்க்கு ஒரு முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கடைசி வரை ஒப்பந்த ஊழியராக இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். காவல் துறை இப் போராட்டத்திற்கு அணுமதி மறுத்துள்ளது” என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருகிற ஒப்பந்த ஊழியர் விஜய லெட்சுமி பேசுகையில்,
அரசு உங்களுக்கு மாற்று பணி வழங்குவது பற்றி உங்களிடம் பேசினார்களா? என்ற கேள்விக்கு,
“அப்படி எதுவும் பேசவில்லை. 2021 மார்ச் மாதம் ஒரு G.O. தந்தார்கள். இப்பொழுது எந்த முன் அறிவிப்பும் இன்றி எங்களை பணி நீக்கம் செய்தது இருக்கிறார்கள். நாங்கள் முறையாக MRP தேர்வு எழுதி தான். பணிக்கு வந்துள்ளோம். பணி பாதுகாப்புக்காக தான் அரசு வேலை கேட்கிறோம். ஒப்பந்த பணி எங்களுக்கு பணி பாதுகாப்பு தேவை” என்றார்.
மேலும், ‘கொரோனா காலகட்டத்தில் நாங்கள் தீவிர பணியில் ஈடுபட்டோம். எங்கள் பணி நிரந்தரம் ஆகும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Vj5Xepz
via IFTTT
0 Comments