கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி!

LATEST NEWS

500/recent/ticker-posts

கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி!

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழுதப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (25). இவர், கல்லாவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் தவணை முறையில் தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப லிங்கம் (34) என்பவர் ரூபாய் 24,80,000 பணத்தை வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

image

என்னை ஏமாற்றிய புஷ்ப லிங்கத்திடம் இருந்து நான் கொடுத்த பணத்தை மீட்டுத் தர வேண்டும். நான் பணம் திருப்பிக் கேட்டதால், என்னை தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் வருகிறார் அவர்” என தெரிவித்துள்ளார் ராமச்சந்திரன். இதைடுத்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கல்லாவி காவல் துறையினர், புஷ்ப லிங்கத்தை கைது செய்து ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments