அறிவுரை கூறிய தாயை கொன்ற மகன்! சடலம் வீட்டினுள் இருக்க வெளியே அமர்ந்து மதுகுடித்த கொடூரம்!

LATEST NEWS

500/recent/ticker-posts

அறிவுரை கூறிய தாயை கொன்ற மகன்! சடலம் வீட்டினுள் இருக்க வெளியே அமர்ந்து மதுகுடித்த கொடூரம்!

மதுவுக்கு அடிமை ஆன காவலர்!

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் பகுதியை சேர்ந்தவர் வாணிஸ்வரி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகனான ராஜேஷ் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் தினேஷ் காவல்துறையில் பணியில் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பணிக்கு செல்லாத காரணத்தினால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தினேஷுக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தினேஷ் மது போதையில் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் தப்பித்த தினேஷின் மனைவி அவரைவிட்டு பிரிந்து ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இந்தநிலையில், தினேஷ் தனது தாய் வாணிஸ்வரி உடன் வசித்து வந்தார்.

image

அறிவுரை கூறிய தாயை கொலை செய்த மகன்!

இந்த நிலையில், நேற்று தினேஷ் அதிக அளவில் மதுகுடித்துவிட்டு தன் தாய் வானீஷ்வரி இடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குடிபோதையில் உள்ள தன் மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார் தாய் வாணிஸ்வரி. ஆனால், அறிவுரைகளை கேட்கமுடியாமல் ஆத்திரமடைந்த தினேஷ் தன் தாயை இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதோடு, கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார்.

image

தாயின் சடலத்தை வைத்துக் கொண்டே வெளியே அமர்ந்து மது குடித்த மகன்!

தன் தாய் இறந்து விட்டார் என்று அறிந்ததும் கதவை பூட்டி வைத்து காலை முதலே தினேஷ் வீட்டின் அருகாமையில் அமர்ந்து குடித்து வந்துள்ளார். வழக்கமாக தன்னுடைய தாயுடன் போனில் பேசும் பழக்கம் கொண்டிருந்த மகள் பிரியா, நேற்று இரவும் போன் செய்திருக்கிறார். ஆனால், தாய் வாணிஸ்வரி செல்போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், நேரடியாகவே வந்து பார்க்கலாம் என வீட்டிற்கு வந்துள்ளார். இன்று மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டினுள் விடாமல் தினேஷ் பிரியாவை தடுத்துள்ளார்.

image

தாயின் சடலத்தை பார்த்து கதறி அழுத மகள்!

தினேஷை மீறி வீட்டினுள் சென்ற பிரியா அங்கு அவரது தாய் வாணிஸ்வரி சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து பிரியா கூச்சலிட்டு கதறி உள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பிரியாவிடம் விசாரிக்க வந்தனர். போலீசார் வருவதை கண்ட தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். பிரியாவிடம் விசாரித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தினேஷை விரட்டி சென்று கைது செய்தனர்.

image

மதுபோதையில் தாயையே கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்

மேலும், இது தொடர்பாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுக்கு அடிமையாகி வேலை இழந்து பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments