பார்ட்டிக்கு பணம் வேண்டும், 60 ரூபாய்க்காக ரிக்‌ஷாகாரரை கொலை : டெல்லியில் அதிர்ச்சி

LATEST NEWS

500/recent/ticker-posts

பார்ட்டிக்கு பணம் வேண்டும், 60 ரூபாய்க்காக ரிக்‌ஷாகாரரை கொலை : டெல்லியில் அதிர்ச்சி

டெல்லியில் மது அருந்த பணம் வேண்டும் என்பதற்காக, ரிக்‌ஷா இழுப்பவரை கொலை செய்து 60 ரூபாய் பணம் மற்றும் ரிக்‌ஷாவை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 15 ஆம் தேதி  கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்க்ளேவிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் ரிக்‌ஷா இழுப்பவரின் சடலம் கிடந்தது. அந்த நபரின் தொண்டையை அறுத்து, தலையில் கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக, போலீஸ் துணை ஆணையர்  தீபக் யாதவ் தெரிவித்தார். பின்னர் அவரின் உடல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

image

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் தெரியவில்லை என்பதால், விசாரணைக் குழு அவரது புகைப்படங்களை, உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து அருகிலுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு காட்டியது. பின்னர் அந்த ரிக்‌ஷா இழுப்பவரின் பெயர் ஜிபன் மஜும்தார் என அடையாளம் காணப்பட்டது என்று டி.சி.பி யாதவ் கூறினார். “அடுத்தக்கட்ட விசாரணையில் மஜூம்தாரின் ரிக்‌ஷா மற்றும் அவரது பணப்பையை காணவில்லை என்பது தெரியவந்தது. சி.சி.டி.வி கேமராக்கள் மூலமாக விசாரிக்கப்பட்டு, கொலையாளிகளான 24 வயது மீன் விற்பனையாளர் சோட்டன் சிங் மற்றும் அவனின் நண்பர் திலீப் ஹல்தார் (20) கைது செய்யப்பட்டனர்

ஜனவரி 14 ஆம் தேதி இரவு, அவர்கள் மது அருந்த பணம் வேண்டும் என்ற காரணத்திற்காக, இருவரும் அந்த ரிக்‌ஷா இழுப்பவரின் தொண்டையை அறுத்து, அவரது அடையாளத்தை மறைக்க கல்லால் தலையை நசுக்கி கொன்றனர். அதன்பின் அவரிடமிருந்த 60 ரூபாய் பணம் மற்றும் ரிக்‌ஷாவை திருடிச் சென்றனர். இந்த குற்றவாளிகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், முன்னர் ஐந்து திருட்டு வழக்குகளில் சிக்கியிருப்பதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments