"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்

LATEST NEWS

500/recent/ticker-posts

"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்

சென்னை பீர்க்கன்கரணையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் பங்கேற்றார்.

சென்னை பீர்க்கன்கரணையில் உள்ள தனியார் பள்ளியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மேதகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

image


பின்னர், இந்த விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இங்கு, சிறுவர்கள் சிலம்பம் சுற்றுவதை பார்க்கும்போது கொரோனாவை ஓட ஓட விரட்டுவதை போன்று எனக்கு தோன்றியது. பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை நிச்சயம் தேவை. அனைவருக்கும் சிலம்பம் கற்று கொடுக்க வேண்டும்” என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.

image 

இதனிடையே தெலங்கானா ஆளுநரின் வருகையையொட்டி சாலையில் வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த பிறகு பேனர் வைக்க தடை உள்ள நிலையில், மீண்டும் பேனர் கலாசாரம் உருவெடுத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/39BH4Sc
via IFTTT

Post a Comment

0 Comments