சென்னை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்குச் செல்ல 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'ஒற்றுமை சிலை' என்று அழைக்கப்படும் குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் சிலைக்கு செல்ல தடையற்ற போக்குவரத்தை இணைப்பதற்காக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 8 புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோரும் கொடியசைத்து புதிய ரெயில்களை தொடங்கி வைத்தனர். மேலும், அகல ரயில் பாதைகள், ரயில் நிலையக் கட்டிடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XQnjkh
via IFTTT
0 Comments