“பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” - பிரேமலதா

LATEST NEWS

500/recent/ticker-posts

“பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” - பிரேமலதா

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போராட்டம் நடத்துவோரை தடுப்பதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

image

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் தேமுதிகவில் இணையும் விழா, திருப்பூர் - அருள்புரம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடச் சென்ற திமுக பாராளுமன்ற  உறுப்பினர் கனிமொழி தடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, போராட்டம் நடத்துவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பிரேமலதா கூறினார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments