எதிர்ப்பை மீறி தொடர்ந்து காதலித்த மகள்: போதையில் பீர் பாட்டிலால் குத்திய தந்தை

LATEST NEWS

500/recent/ticker-posts

எதிர்ப்பை மீறி தொடர்ந்து காதலித்த மகள்: போதையில் பீர் பாட்டிலால் குத்திய தந்தை

சோழவந்தான் அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளின் காதலை கண்டித்து மகளை வயிற்றில் பீர் பாட்டிலால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (37) என்பவருக்கு நாகு என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இதில், மூத்த மகள் ராஜேஸ்வரி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

image

இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் இவரை மாணவி காதலித்தது தந்தை முரளிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து முரளி தனது மகளிடம் படிக்கிற வயதில் காதல் போன்ற தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை செலுத்த வேண்டாம் எனவும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளார். இதனை கேட்காத மகள் தொடர்ந்து தான் விரும்பிய இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

image

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த முரளி மது போதையில் தனது மகள் மீதுள்ள கோபத்தில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மகளை குத்தியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராஜேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

image

இதனைத் தொடர்ந்து சோழவந்தான் காவல் துறையினர் முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகளை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments