வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்: வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்: வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது

வடமாநிலங்களில் இருந்து கொண்டே சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய இருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நட்சத்திர ஹோட்டலில் நடத்திய விசாரணையில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிந்தது.

இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வெளிநாட்டு பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வடமாநில நபர்கள் சிலர் வேலை வாங்கித் தருவதாக சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

image

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வடமாநில நபர்களின் செல்போன் எண்ணை டிராக் செய்ததில் அவர்கள் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், பாலியல் தொழில் நடத்தி வந்த இரு புரோக்கர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புரோக்கர்களான ஜோதி ரஞ்சன் ஜனா என்கிற ராகுல் மற்றும் கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் என்பது தெரியவந்தது. இவர்கள் பல வருடங்களாக ஆன்லைன் மூலமாக பல மாநிலங்களில் பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மாநிலத்திற்கு பெண்களை அனுப்பி வருவதும், பெரும்பாலும் வெளிநாட்டு பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி வரவழைத்து நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக சென்னையில் தி.நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் அப்பார்ட்மெண்டுகளில் முன்பதிவு செய்து வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இரு புரோக்கர்கள் மீதும் 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரோகன் ராகுல், சாம், மனோஜ், ராஜ் என பல பெயர்களை மாற்றி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் புவனேஷ்வர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று சென்னைக்கு அழைத்து வரக்கூடிய பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments