சென்னை: சொத்துக்காக தந்தை கொலை - கொடூர மகனுக்கு போலீசார் வலை

LATEST NEWS

500/recent/ticker-posts

சென்னை: சொத்துக்காக தந்தை கொலை - கொடூர மகனுக்கு போலீசார் வலை

வளசரவாக்கத்தில் சொத்துக்காக தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி காவேரிப்பாக்கத்தில் உள்ள நிலத்தில் புதைத்த மகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன் (80), இவரது மகள் காஞ்சனா, தனது தந்தையை குமரேசனை காணவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

image

அப்போது வீட்டிற்குள் ரத்த கரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது குமரேசனின் மகன் குணசேகரன் (50), தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காவேரிப்பாக்கத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளதாக வந்தது.

தகவலையடுத்து வளசரவாக்கம் போலீசார், காவேரிபாக்கம் சென்று குமரேசனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சொத்துக்காக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடி வருகின்றனர்.

image

தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments