புதுக்கோட்டை: குடும்ப பிரச்னையில் இரு குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்

LATEST NEWS

500/recent/ticker-posts

புதுக்கோட்டை: குடும்ப பிரச்னையில் இரு குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்

பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெற்ற இரண்டு குழந்தைகளை கொலை செய்த கொடூர தாயை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் பொன்னடைக்கண் (28).என்பவருக்கும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த சின்னுப்பிள்ளை என்பவரது மகள் பஞ்சவர்ணம் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் 8 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

image

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாயார் வீட்டில் பஞ்சவர்ணமும் பொன்னடைக்கணும் குடும்ப பிரச்னை குறித்து சமரசமாக பேசிவிட்டு கருப்பர்கோவில்பட்டிக்கு சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பஞ்சவர்ணம் திடீரென கணவனின் குடி பழக்கத்தால் ஏற்பற்ற குடும்ப பிரச்னையை நினைத்து மன விரக்தியில் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமான கொலை செய்துவிட்டு, இந்த தகவலை செல்போனை தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பஞ்சவர்ணத்தின் தாயார் சின்னுபிள்ளை உடனடியாக அங்கு வந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளன. இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

image

அப்போது பஞ்சவர்ணம் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பஞ்சவர்ணத்தை கைது செய்து அவரது கணவர் பொன்னடைக்கணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments