சென்னை: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

சென்னை: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை உள்ளகரம், சாய்ராம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (40), இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம், கடந்த 5ம் தேதி திருடு போனது. இது குறித்து, மடிப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இருசக்கர வாகனம் திருடுபோன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

image

இதில், வாகனத்தை திருடியது எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த முருகன் (34), என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவரிடமிருந்து, ஐந்து இருசக்கர வாகனங்கள், வீடுபுகுந்து திருடிய வழக்கில் ஒரு சவரன் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

image

மேலும், விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் மீது வாகன திருட்டு, வீடுபுகுந்து திருட்டு உள்ளிட்ட, 36 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments