'நன்றாக எழுதியுள்ளீர்கள்' - சிறுவனின் கடிதத்திற்கு தோனி பாராட்டு

LATEST NEWS

500/recent/ticker-posts

'நன்றாக எழுதியுள்ளீர்கள்' - சிறுவனின் கடிதத்திற்கு தோனி பாராட்டு

16 வயது ரசிகர் ஒருவர் நெகிழ்ச்சியாக எழுதியிருந்த கடிதத்திற்கு தோனி பதிலளித்துள்ளார்.

ஐ.பி.எல். அணிகளிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு கிரிக்கெட் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அந்த அணிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனை அவ்வப்போது மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்தாலே தெரியும்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 16 வயதான ரசிகர் ஒருவர் கேப்டன் எம்எஸ் தோனிக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தோனி மீதான தனது அபிமானத்தையும், இந்திய உலகக் கோப்பை வென்ற கேப்டன் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தனிப்பட்ட தாக்கத்தையும் அந்த ரசிகர் வெளிப்படுத்தி இருந்தார்.



இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதனைப் பார்த்த தோனி, அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். “நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்” என்று எழுதியதோடு, அதில் கையெழுத்தும் போட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் ஒரே சீசனில் 20+ விக்கெட்டுகள்: பும்ரா சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/TtBOvFz
via IFTTT

Post a Comment

0 Comments