தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய கேரளா இளைஞர் கைது. 9 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம், பேருந்து நிலையத்தில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
அவர் பெயர் செபின் (23) எனவும் அவர் கேரளா திருச்சூரை சேர்ந்தவர் என்று தெரிந்தது. போலிசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தியப்பொழுது, அவர் போலீசுக்கு பயந்து, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சந்தேகம் கொண்ட போலீசார், அவருடைய உடைமைகளை சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படைத்தனர்.
உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments