கேரளாவில் மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்கு பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீபற்றியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Minor fire in Malabar express, near Varkala #Trivandrum pic.twitter.com/mJbGXUp3oO
— Aashish (@aash_tvm) January 17, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bLkMQs
via IFTTT
0 Comments